இலங்கை செய்தி

முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலையுடன் பிள்ளையானிற்கு தொடர்பு: வெளியான பகீர் தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் மட்டக்களப்பில் தற்போது இராஜாங்க அமைச்சராகயிருப்பவருக்கும் தொடர்பிருந்தது என மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் காணி ஆணையாளர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,“கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவராக தான் இருந்தபோதே முன்னாள் உபவேந்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அக்காலத்தில், தற்போது மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சராகயிருப்பவர் தொடர்புபட்டது குறித்து பல்கலைக்கழகத்தில் பேசப்பட்டது.சட்டத்திற்கு முரணான வகையில் காணி கோரி […]

இலங்கை செய்தி

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை – சாகல ரத்னாயக்க!

  • April 11, 2023
  • 0 Comments

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். மொரட்டுவை கட்டுபெத்தவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தில் அத் திணைக்கள அதிகாரிகளால் ஆற்றப்படும் சேவையை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு 60 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு, 55 வருடங்களில் சேவைக்கால நீடிப்பைக் […]

இலங்கை செய்தி

இந்த நாடு எப்போதோ முன்னேற்றம் அடைந்திருக்கும் : வரிவிதிப்பு தொடர்பில் சிறிதரன் குற்றச்சாட்டு!

  • April 11, 2023
  • 0 Comments

வரி விதிப்பு ஊடாக நாடு முன்னேற்றமடையும் என்றால் இந்த நாடு எப்போதோ முன்னேற்றமடைந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி ஒத்துழைப்புக்கு அனுமதி கிடைத்தவுடன்  ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்து  கொண்டாடும் நிலை […]

இலங்கை செய்தி

வடமாகாண ஆளுநருக்கு எதிரான விசாரணை மே மாதத்தில் எடுத்துகொள்ளப்படும் என அறிவிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்தமை தவறான செயற்பாடு என்று சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, குறித்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக எதிர்வரும் மே 24ஆம் திகதியன்று மீண்டும் இவ்விடயத்தினை மன்று கவனத்தில் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தன்னிச்சையாக நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக வட […]

இலங்கை செய்தி

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது – தயாசிறி ஜயசேகர!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர். இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.மின்சார சட்டத்தின் 30ஆவது பிரிவின் (பி) உறுப்புரையில் மின்பாவனையாளர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது தாங்கிக் […]

இலங்கை செய்தி

900 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசு கப்பல்!

  • April 11, 2023
  • 0 Comments

00 சுற்றுலாப் பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வைக்கிங் நெப்டியூன் என்ற அதிசொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு வருகை தந்துள்ளது. இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைக்க அரசாங்கம் தயாரில்லை என்கிறார் சாகல ரத்நாயக்க

  • April 11, 2023
  • 0 Comments

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு  தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க  தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு  அமைச்சரவை பத்திரத்திற்கமைய  சிவில் பாதுகாப்பு சேவை,   (Depreciating service) காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம்  நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன் பிரகாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு  60 வருட  சேவைக்காலத்தை பூர்த்தி  செய்வதற்கு,  55 வருடங்களில்  சேவைக்கால நீடிப்பைக் கோர […]

செய்தி வட அமெரிக்கா

ரஷ்ய -உக்ரைன் போரை என்னால் மட்டுமே நிறுத்த முடியும் – டிரம்ப் அதிரடி பேச்சு

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் […]

இலங்கை செய்தி

சுற்றுலா பயணியிடம் அத்துமீறல் : ஒருவர் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த சுற்றுலா வழிகாட்டியொருவர் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப்பயணியின் முறைப்பாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் புனித நகர பகுதிக்கு தான் சென்றவேளை இந்த நபர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை செய்தி

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி

  • April 11, 2023
  • 0 Comments

தொழில் காரணமாக வெளிநாட்டிற்கு  செல்லும் இலங்கையர்களுக்கு பணியகத்தின் இணையத்தள முறைமையின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் சுய பதிவை அணுகுவதன் மூலம் இந்தப் பதிவை மேற்கொள்ள முடியும் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!