இலங்கை செய்தி

பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக குடு சாலிந்து மீது குற்றச்சாட்டு

  • April 12, 2023
  • 0 Comments

ந்து மல்ஷித குணரத்ன என்றழைக்கப்படும் “குடு சாலிந்து”, பயங்கரவாத குழுக்களுடன் வைத்திருந்ததாக கூறப்படும் பல்வேறு தொடர்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அதிகாரிகள் இன்று நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளனர். புலி ஆதரவு குழுக்கள் மற்றும் ஏனைய சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் “குடு சலிந்து” கொண்டிருந்ததாக கூறப்படும் தொடர்புகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உட்பட “குடு சலிந்து” […]

இலங்கை செய்தி

விமான நிலையத்தில் வழங்கப்படும் கட்டணச் சலுகையை அதிகரிக்க நடவடிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

வெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் கட்டணச் சலுகையை அதிகரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அனுப்பிய பணத்தின் அடிப்படையில் மேலதிக கடமைக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு!

  • April 12, 2023
  • 0 Comments

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் இன்று ஆராயவுள்ளன. சிவில் சமூகத்தினர் தொழிற்சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்கள்  பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளன. உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய சட்டமூலம் மற்றும் அதன் நியாயபூர்வ தன்மை குறித்து ஆராய்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம் […]

இலங்கை செய்தி

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1000 ரூபாவால் குறைப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராமுடைய ஒரு எரிவாயு சிலிண்டர் 1000 ரூபா வரை  குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது. வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலை குறைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் […]

இலங்கை செய்தி

11 கிலோ தங்கத்தை ஜெல் வடிவில் கடத்த முற்பட்ட நால்வர் கைது!

  • April 12, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும்,  விமான நிலைய பாதுகாப்பு  பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்திலிருந்து 11 கிலோ தங்கத்தை  ஜெல் வடிவில் ஆக்கப்பட்டு பார்சல்களில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெளிநாடு ஒன்றிலிருந்து வந்த பயணி ஒருவர் இந்த தங்க கையிருப்பை  பயணிகள் பரிமாற்று பகுதியில் உள்ள  குறித்த வரியில்லாத வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரிடம்  […]

இலங்கை செய்தி

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். வளர்பிறை தரிசனம், பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டுப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல்,  சுப காரியங்களை ஆரம்பித்தல் கைவிசேடம் பெறுதல், உணவு உண்ணுதல், தலைக்கு மருத்துநீர் வைத்தல், […]

இலங்கை செய்தி

காதலை மறுத்த மாணவி.. பாடசாலைக்குள் நுழைந்து வாள்வெட்டு சம்பவம் !

  • April 12, 2023
  • 0 Comments

கல்ஓயா பிரதேசத்தில் உள்ள தம்ம பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்ஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீதே வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலய வளாகத்தினுள் (02) காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் இமாஷா என்ற மாணவியை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்ஓயா காவல்துறைக்கு கிடைத்த […]

இலங்கை செய்தி

கிளர்ச்சிக்கார்ர்களை ஒடுக்கவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

  • April 12, 2023
  • 0 Comments

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசின் நோக்கம் அல்ல. ஆனால், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வெளியிடப்படுவது தொடர்பில் கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார். அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் “புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு இம்மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவரைவு சபையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே அது பேராபத்து […]

இலங்கை செய்தி

இலங்கையில் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், இவ்வாறு பொருட்கள் குறைவடைவதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எந்த பொருட்களிலும், தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை. பண்டிகைக்காலத்தில் அனைத்து பொருட்களும், தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வெங்காயம், பருப்பு, கிழங்கு, சீனி, கோதுமை […]

இலங்கை செய்தி

இலங்கையில் தண்டனை முறைமையில் மாற்றம்!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சிறைச்சாலைகளில் தடுத்துவைப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த சந்தேகநபர்களை ஒரு பாதுகாவலரின் கீழ் வைத்து கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!