ஆப்கானிஸ்தான் கொலை தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தான் குடிமகன் ஒருவரைக் கொன்றது தொடர்பாக ஆஸ்திரேலிய இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வாளர் அலுவலகம் (OSI) மற்றும் ஆஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸுக்கு இடையிலான கூட்டு விசாரணையைத் தொடர்ந்து 41 வயதான நபர் நியூ சவுத் வேல்ஸில் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டார் என்று OSI மற்றும் காவல்துறையின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ வீரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், பின்னர் சிட்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையுடன் ஆப்கானிஸ்தானுக்கு […]













