உலகம் செய்தி

கிரீன்லாந்தில் படைகளைக் குவிக்கிறது டென்மார்க்: ஆர்க்டிக் பிராந்தியத்தில் போர் மேகங்கள்

  • January 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கடுமையாக அச்சுறுத்தலை தொடர்ந்து டென்மார்க் கிரீன்லாந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. நேற்று மாலை மேற்கு கிரீன்லாந்தில் உள்ள காங்கர்லுசுவாக்கில் (Kangerlussuaq) டேனிஷ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைவர் பீட்டர் போய்சன் (Peter Boyesen) உறுதிப்படுத்தியுள்ளார். டேனிஷ் துருப்புக்கள் ஆர்க்டிக் பிரதேசத்தில் தரையிறங்கியதாகவும், ஒபரேஷன் ஆர்க்டிக் எண்டியூரன்ஸ் (Operation Arctic Endurance) என அழைக்கப்படும் பன்னாட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க முன்னர் அனுப்பப்பட்ட சுமார் 60 பேருடன் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை கட்டுப்படுத்த […]

இலங்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தால் 640க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

  • January 20, 2026
  • 0 Comments

இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நுகேகொடையில் உள்ள கங்கோடவில நீதிமன்றத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இன்று அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவர்களிடம் இருந்து ரூ. 860 மில்லியன் முதல் 900 மில்லியன் வரை மோசடி செய்துள்ளதாகவும் இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் […]

உலகம்

அமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

  • January 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் அதிகளவிலான பனிப் பொழிவு காரணமாக சுமார் 100 வாகனங்கள் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மிச்சிகன் (Michigan) மாநில காவல்துறை, I-196 வழித்தடத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர். இதில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் யாரும் உயிரிழந்ததாக தகவல்கள் இல்லை. விபத்துக்கு முன்பு மணிக்கு 32-40 கிமீ வேகத்தில் சாலைகளில் பனி கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சாலைகளில் உள்ள பனியை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? சஜித் அணிமீது சபையில் சாட்டையடி!

  • January 20, 2026
  • 0 Comments

“பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவுக்கு Dr. Harani Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பதை எதிரணி அறிவிக்க வேண்டும்.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கேள்வி எழுப்பினார். “ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி […]

தமிழ்நாடு

தமிழக சட்டப் பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

புத்தாண்டில் தமிழக சட்டசபை கூடிய முதல் நாளிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்துள்ளமை அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதத்தை முதலில் இசைக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆளுநர் வெளிநடப்பு செய்தார் எனக் கூறப்படுகின்றது. தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை […]

உலகம்

ஐரோப்பிய நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்!

  • January 20, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து பாதுகாக்க விரும்பும் ஐரோப்பிய நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்போதுவாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார். முன்னதாக கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் வரை முதல் கட்டமாக 10 சதவீத வரியும், பின்னர் ஜுன் மாதத்தில் இருந்து 25 சதவீத வரியும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்கள் அவசர கூட்டத்தை நடத்தியிருந்தனர். இதில் அமெரிக்கா மீது 90 சதவீத வரி விதிக்க பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப் தற்போது […]

உலகம்

கிரீன்லாந்திற்கு துருப்புக்களை அனுப்ப பரிசீலித்து வரும் கனடா!

  • January 20, 2026
  • 0 Comments

நேட்டோ இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க கிரீன்லாந்திற்கு ஒரு சிறிய துருப்புக்களை அனுப்ப கனடா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவ அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கான திட்டங்களை அரசாங்கத்திடம் சமர்பித்துள்ளதாகவும், பிரதமர் மார்க் கார்னியின் ( Mark Carney) முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில்  ஐரோப்பிய நாடுகள் கடந்த வாரம் கிரீன்லாந்திற்கு சிறிய எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களை அனுப்பியிருந்தனர். இந்த ஆண்டு இறுதியில் துருப்புக்கள் பெரிய அளவிலான பயிற்சிகளை மேற்கொள்ள […]

பொழுதுபோக்கு

இசைஞானிக்கு பத்மபாணி விருது அறிவிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

இசைஞானி இளையராஜாவுக்கு Musician Ilayaraja பத்மபாணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 11-வது அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28 முதல் பெப்ரவரி 4 வரை மகாராஷ் டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆண்டுதோறும் பத்மபாணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பத்மபாணி விருது தமிழின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் பாராட்டு பத்திரம் மற்றும் பணப்பிரிசும் வழங்கப்படும்.

உலகம்

குவாத்தமாலா சிறைக் கலவரம் – 43 காவலர்கள் பிணைக்கைதிகளாக பிடிப்பு, 09 பேர் பலி!

  • January 20, 2026
  • 0 Comments

குவாத்தமாலா காவல்துறையினர் மீது சிறைக் கைதிகள் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 09 ஆக அதிகரித்துள்ளது. மேற்படி சம்பவத்தை தொடர்ந்து ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ (Bernardo Arévalo) அவசரநிலையை பிறப்பித்திருந்தார். சிறைக்கைதிகள் ஒன்றிணைந்து 43 காவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் மேற்படி கைதிகள் தங்கள் தலைவர்களுக்கு சலுகைகளை கோரியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று 30 நாள் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. குறித்த அறிவித்தலில் சந்தேகப்படும் பொதுமக்களை கைது செய்வதும் […]

விளையாட்டு

இந்தியாவில் ஆட மறுக்கும் பங்களாதேஷ் அணிக்கு ICC காலக்கெடு விதிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

டி-20 T-20 உலகக்கிண்ண தொடர் தொடர்பில் முடிவெடுப்பதற்காக பங்களாதேஷ் அணிக்கு நாளைவரை (21) ஐ.சி.சி. ICC காலக்கெடு வித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கிண்ண தொடர்பில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பதற்காகவே இவ்வாறு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதிக்குள் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தீர்மானமொன்றை எடுக்காவிடின் வேறு அணி சேர்க்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. டி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7-ம் திகதி முதல் இந்தியா மற்றும் இலங்கைஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது. […]

error: Content is protected !!