இலங்கை செய்தி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நலன்புரித்திட்ட ஆறுதல் போதாது – ரவிகரன் ஆதங்கம்

  • January 20, 2026
  • 0 Comments

அரசாங்கம் மக்களுக்கு வறுமையை ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெசும என்ற நலன்புரி நன்மைகள் என்னும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்துவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாமன்றில் இன்று (20) இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு (அஸ்வெசும) தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “படையினர் மற்றும் அரசதிணைக்களங்கள் மக்களின் வாழ்வாதாரக் காணிகளை அபகரித்திருத்தல், சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த தவறுதல், […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் சீனாவின் ‘மெகா தூதரகம்’: பாதுகாப்பு அச்சங்களுக்கு மத்தியில் பிரித்தானியா அனுமதி

  • January 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு குறித்த பல்வேறு கவலைகளுக்கு மத்தியிலும், லண்டனில் புதிய சீனத் தூதரக வளாகத்தை அமைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 255 மில்லியன் பவுண்டுகள் செலவில் 22,000 சதுர மீற்றர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ‘மெகா தூதரகம்’, ஐரோப்பாவிலேயே சீனாவின் மிகப்பெரிய தூதரக வளாகமாகத் அமையவுள்ளது. லண்டன் டவர் பிரிட்ஜ் அருகே அமைந்துள்ள ‘ரோயல் மின்ட் கோர்ட்’ (Royal Mint Court) பகுதியில் […]

அரசியல் இலங்கை செய்தி

“எங்களுக்கு புக்க வேண்டாம்: அந்த செம்மறிக்கு கதைக்க தெரியவில்லை” – சபையில் அர்ச்சுனா!

  • January 20, 2026
  • 0 Comments

அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களையே யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக என்.பி.பி. அரசாங்கம் வைத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archuna குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “உணவு, உடை, உறையுள் என்பனவே அடிப்படை தேவைகள் என்பது தரம் ஒன்று மாணவருக்குகூட தெரியும். ஆனால் உணவு, உறையுள், வீடு என ஜனாதிபதியின் மேடையில் இருந்துகொண்டு செம்மறியொன்று கூறுகின்றது. இப்படியான செம்மறிகளையே யாழ்.மாவட்ட எம்.பிக்களாக என்.பி.பி. அரசாங்கம் […]

உலகம்

ஈரான் விவகாரம் : அவசரமாக கூடும் ஐ.நா மனித உரிமை கவுன்சில்!

  • January 20, 2026
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வரும் நாட்களில் ஈரான் குறித்து அவசர அமர்வை நடத்தவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டங்களை  ஒடுக்க முன்னெடுக்கப்பட்டு வரும் ஆபத்தான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சிக் காரணமாக ஈரானில் வெடித்துள்ள போராட்டங்களால் இதுவரை 5000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk) இது தொடர்பில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். […]

இலங்கை செய்தி

மாதச் சம்பளம் 6 இலட்சத்திற்கும் அதிகம் ; 25 முதல் 45 வயதுடையவர்களுக்கு அரிய வாய்ப்பு

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வீட்டுத் தாதியர் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான தகுதிகளாக, 25 முதல் 45 வயதுக்குட்பட்ட, க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் NVQ III தாதியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தது 11 மாத கால தாதியர் அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், ஆங்கில மொழியில் போதிய […]

இலங்கை

நோபல் பரிசு அமெரிக்காவிற்கு இல்லை என்றால் உலக அமைதி பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

  • January 20, 2026
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். மேலும் இந்த உந்துதலை அமைதிக்கான நோபல் பரிசை வெல்லத் தவறியதோடு தொடர்புபடுத்தி பேசியுள்ளார். நோர்வேயின் பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோயருக்கு (Jonas Gahr Stoere) அனுப்பிய குறுஞ்செய்தியில், 08 நாடுகளின் போரை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்ததைக் கருத்தில் […]

உலகம் ஐரோப்பா செய்தி

ட்ரம்ப்பின் கருத்தை வரவேற்கும் நைஜல் மற்றும் கெமி ; பிரித்தானிய அரசியலில் சலசலப்பு

  • January 20, 2026
  • 0 Comments

சாகோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “மிகப்பெரிய முட்டாள்தனமான செயல்” என கடுமையாக விமர்சித்துள்ளார். முக்கியமான இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை எவ்விதத் தேவையுமின்றி கையளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், இந்த விவகாரத்தை தான் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதற்கான நியாயமாக முன்வைத்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் முன்னர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த விமர்சனம் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, கன்சர்வேட்டிவ் […]

உலகம்

சுறாக்களின் செயற்பாடு அதிகரிப்பு – ஆஸ்திரேலியாவில் மூடப்படும் கடற்கரைகள்!

  • January 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில்  ஏராளமான கடற்கரைகள் மூடப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணிநேரத்தில் நான்கு சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரின் தரம், மீன்கள் மற்றும் வேட்டையாடுபவர்களை ஈர்க்கும் கனமழை காரணமாக சுறாக்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். காலநிலை சார்ந்த வெப்பமயமாதல் கடலோரப் பகுதிகளில் சுறாக்கள் செலவிடும் நேரத்தை நீட்டிப்பதாகவும், மனிதர்களுடன் சந்திப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்களின் […]

இந்தியா

இந்திய குடியரசு தின விழா: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 77-வது குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. டெல்லி கர்தவ்ய பாதையில் குடியரசு தினவிழா நடைபெறுகின்றது. ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையின் வளமை ஆகியவற்றை பறைசாற்றுவதுடன் இந்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் கலந்து […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் புரோஸ்டேட்  மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது ; தேசிய சுகாதார சேவை தகவல்

  • January 20, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளதாக தேசிய சுகாதார சேவை (NHS) தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் 64,425 ஆண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 சதவீத அதிகரிப்பாகும். தற்போது ஸ்காட்லாந்திலும் இது பொதுவான புற்றுநோயாக மாறியுள்ள நிலையில், வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு 12,000-க்கும் அதிகமானோர் புரோஸ்டேட் புற்றுநோயால் உயிரிழப்பதாகத் தரவுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்ட […]

error: Content is protected !!