உலகம் செய்தி

நியூசிலாந்தில் வரலாறு காணாத கனமழை ; மண்சரிவில் பலர் மாயம்

  • January 22, 2026
  • 0 Comments

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளியால் மண்சரிவில் சிக்கி, ஒரு சிறுமி உட்பட பலர் காணவில்லை என அஞ்சப்படுகிறது. ஐந்து பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் மௌங்கனுய் பகுதியில் உள்ள சுற்றுலா முகாமில் இன்று காலை பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அவசரகாலத் துறை அமைச்சர் மார்க் மிட்செல், பாதிக்கப்பட்ட பகுதிகள் “போர் மண்டலத்தைப் போல” இருக்கின்றன என தெரிவித்தார். தீயணைப்பு துறையினர், மண்ணுக்குள் புதைந்தவர்களிடமிருந்து உதவி கோரும் குரல்கள் […]

popular-actress-injured-by-dog-bite-health-update பொழுதுபோக்கு

நாயால் நடிகைக்கு வந்த சோதனை!

  • January 22, 2026
  • 0 Comments

நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பிரபல நடிகை Deena Sravya சர்ச்சை புயலில் சிக்கியுள்ளார். அவரின் இந்த செயல் இந்து மதத்தை அவமதிக்கும் நடவடிக்கையாகும். எனவே, அவர் உடன் மன்னிப்பு கோர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல் ஆரம்பமாகியுள்ளது. எனினும், மன்னிப்பு கோராமல் தனது தாயார் ஊடாக விளக்க அறிக்கையொன்றை விடுத்துள்ளார் சம்பந்தப்பட்ட நடிகை. சரி அப்படி என்னதான் நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். தெலங்கானாவில் உள்ள மேடாரம் பகுதியில் சம்மக்கா-சாரக்கா அம்மன் திருவிழா வெகு […]

இந்தியா தமிழ்நாடு

அனல் கக்கும் தமிழக அரசியல் களம்: நாளை நேரில் களமிறங்கும் மோடி!

  • January 22, 2026
  • 0 Comments

பிரதமர் மோடி நாளை (23) தமிழகம் வருகின்றார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே மோடிவருகின்றார். பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் அனல் கக்குகின்றது. தமிழகத்தில் பிரதான கட்சிகளுள் ஒன்றான அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, டி.டி.வி. தினகரன் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பார்வையற்ற பயணிகளுக்கு கடும் சிரமம்

  • January 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பார்வையற்ற மற்றும் கண்பார்வை குறைபாடுள்ள பயணிகள் ரயில் பெட்டிகளுக்கும் நடைமேடைகளுக்கும் இடையிலான இடைவெளியை கடக்க பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பார்வையற்றோர் நலனுக்கான தேசிய நிறுவனம் (RNIB) வெளியிட்ட அறிக்கையில், 82 சதவீத பயணிகள் இந்த இடைவெளியில் தவறி விழுந்து காயமடையும் அச்சத்தினால், பயணங்களைத் தவிர்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சிலர் ஓடும் ரயில்களில் சிக்கியும், கதவுகளில் மாட்டிக்கொண்டும் விபத்துகளை சந்தித்துள்ளனர். ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், பிரித்தானிய ரயில் நிலையங்களில் பார்வையற்றோருக்கான […]

இலங்கை செய்தி

ராஜபக்ச அணிக்கு டெல்லி அழைப்பு: குடியரசு தின நிகழ்விலும் பங்கேற்பு!

  • January 22, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உயர்மட்ட குழுவொன்று இந்தியா செல்லவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa  தலைமையிலான குழுவினரே டெல்லி செல்லவுள்ளனர். இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கையின் முக்கிய தரப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் உள்ளடங்குகின்றது. இதற்கமையவே மொட்டு கட்சி குழுவினர் இந்தியா செல்லவுள்ளனர். […]

இந்தியா

நெல்சன் மண்டேலாவின் பாரியாருக்கு இந்திராகாந்தி அமைதி விருது!

  • January 22, 2026
  • 0 Comments

நெல்சன் மண்டேலாவின் பாரியாரான கிரேஷா மஷேலுக்கு Graça Machel 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியா காந்தி அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கிரேஷா மஷேல் ஆற்றிய பணிகளுக்காகவே அவருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது. மாசாம்பிக் நாட்டைச் சேர்ந்த இவர் மனித உரிமை போராளியாக பார்க்கப்படுகின்றது. அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை […]

உலகம்

தொடர்ந்து 05 ஆவது ஆண்டாக வர்த்தக பற்றாக்குறையை எதிர்நோக்கும் ஜப்பான்!

  • January 22, 2026
  • 0 Comments

ஜப்பான் 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வர்த்தகப் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்பின் வரிகள் மற்றும் அண்டை நாடான சீனாவுடனான ராஜதந்திர பிளவால் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், முழு ஆண்டிலும், ஜப்பான் 2.65 டிரில்லியன் யென் ($17 பில்லியன்) வர்த்தகப் பற்றாக்குறையைப் பதிவு செய்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில், ஜப்பான் 105.7 பில்லியன் யென் ($669 மில்லியன்) வர்த்தக […]

இலங்கை

வரலாறு காணாத அளவில் குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு!

  • January 22, 2026
  • 0 Comments

நுவரெலியாவில் இன்று மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், இது 3.5°C ஆக பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் பிராந்திய கண்காணிப்பு மையங்களிலிருந்து இன்று அதிகாலை சேகரிக்கப்பட்ட வெப்பநிலை தரவுகளின் அடிப்படையில் இந்த அளவீடு பதிவாகியுள்ளது. மேலும் இது சமீபத்திய காலங்களில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும். அதேபோல் பண்டாரவெலவில்  11.5°C, பதுளையில் 15.1°C மற்றும் கட்டுகஸ்தோட்டையில் 15.9°C என  குறைந்தபட்ச வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன. இன்று காலை அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவில் 25.3°C […]

இலங்கை செய்தி

மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் உறுதி!

  • January 22, 2026
  • 0 Comments

ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் UNDP பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவுடன் Alexander De Croo பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பிற்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐ.நா. வழங்கிய ஆதரவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார். “ பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான […]

இலங்கை செய்தி

இன்று இலங்கை வருகிறது IMF குழு!

  • January 22, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் IMF பிரதநிதிகள் குழு இன்று (22) இலங்கை வரவுள்ளது. டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர் என தெரியவருகின்றது. பேரிடரால் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. இலங்கைக்கான அடுத்தக்கட்ட கடன் உதவி பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதிவரை இக்குழு இலங்கையில் தங்கி இருக்கும்.

error: Content is protected !!