நியூசிலாந்தில் வரலாறு காணாத கனமழை ; மண்சரிவில் பலர் மாயம்
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளியால் மண்சரிவில் சிக்கி, ஒரு சிறுமி உட்பட பலர் காணவில்லை என அஞ்சப்படுகிறது. ஐந்து பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் மௌங்கனுய் பகுதியில் உள்ள சுற்றுலா முகாமில் இன்று காலை பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அவசரகாலத் துறை அமைச்சர் மார்க் மிட்செல், பாதிக்கப்பட்ட பகுதிகள் “போர் மண்டலத்தைப் போல” இருக்கின்றன என தெரிவித்தார். தீயணைப்பு துறையினர், மண்ணுக்குள் புதைந்தவர்களிடமிருந்து உதவி கோரும் குரல்கள் […]













