உலகம் முக்கிய செய்திகள்

உலகின் 95 சதவீதமான வளங்கள் 01 சதவீத செல்வந்தர்களின் வசம் – அதிக வரி விதிக்க அழைப்பு!

  • January 23, 2026
  • 0 Comments

பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கக் கோரி எழுதப்பட்டுள்ள ஒரு திறந்த கடிதத்தில் ஏறக்குறைய 400  பணக்காரர்கள் கையெழுத்திட்டுள்ளனர். நடிகர் மார்க் ருஃபாலோ ( Mark Ruffalo) மற்றும் இசைக்கலைஞர் பிரையன் எனோ (Brian Eno) உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். உலகில் 95  சதவீதத்திற்கும் அதிகமான சொத்துக்களை 1 சதவீத பணக்காரர்கள் சொந்தமாக வைத்திருக்கிறார்கள் என்று அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே செல்வந்தர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையில் விரிவடைந்து வரும் ஏற்றத்தாழ்வை குறைக்குமாறு […]

இந்தியா செய்தி

இந்தியாவில் தேர்தல் வாக்குறுதிக்காக 500-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொலை

  • January 23, 2026
  • 0 Comments

தெலுங்கானா மாநிலத்தின் கமரெட்டி மற்றும் ஹனம்கொண்டா (Kamareddy – Hanamkonda) உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஒரு மாதத்தில் 500-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, தெரு நாய்கள் மற்றும் குரங்குகள் இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த கொடூரக் கொலைகள் அரங்கேற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. நாய்களுக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டும், நீண்ட தடிகளில் கட்டப்பட்ட ஊசிகள் […]

இலங்கை செய்தி

இராஜதந்திர வெற்றியோடு நாடு திரும்பினார் பிரதமர்!

  • January 23, 2026
  • 0 Comments

உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya இன்று (23) பிற்பகல் நாடு திரும்பினார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு இணையாக பிரதமர் பல முக்கியத்துவமிக்க மற்றும் வெற்றிகரமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார். மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியுடனும் முக்கிய கலந்துரையாடலை நடத்தினார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் […]

இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கு முக்கிய பதவி!

  • January 23, 2026
  • 0 Comments

இலங்கை – பெல்ஜியம் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு செய்யப்பட்டார். இந்தச் சங்கத்தின் மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. பெல்ஜியத்தின் இலங்கைக்கான ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ் (Mr. Koenraad Pringiers) கௌரவ விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் […]

ஐரோப்பா செய்தி

ஆப்கானிஸ்தான் போர் குறித்து ட்ரம்ப் பேச்சுக்கு பிரித்தானியா கொந்தளிப்பு

  • January 23, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் நடந்த போரின் போது நேட்டோ துருப்புக்கள் “முன்னணியில் இருந்து சற்று விலகி” இருந்ததாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு பிரித்தானியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகள் எப்போதும் அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று போரில் பங்கேற்றதாக பிரித்தானியாவின் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் கின்னாக்‌ கூறினார் . ட்ரம்பின் கருத்துக்கள் , ஆழ்ந்த ஏமாற்றம் அளிப்பவை  மற்றும் வெளிப்படையாக தவறானவை” என்றும் அவர் தெரிவித்தார். டோரி […]

இலங்கை

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு!!

  • January 23, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக […]

உலகம் செய்தி

வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக மீண்டும் டோ லாம்

  • January 23, 2026
  • 0 Comments

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டோ லாம் (To Lam) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று (ஜனவரி 23) நடைபெற்ற கட்சியின் 14-வது தேசிய மாநாட்டில் 180 மத்திய குழு உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். பதவியேற்றவுடன் ஆற்றிய உரையில், வியட்நாமின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதமாக உயர்த்தப் போவதாக அவர் உறுதியளித்தார். வெறும் ஏற்றுமதியை மட்டும் நம்பியிருக்காமல், புத்தாக்கம் மற்றும் நவீனத் தொழில் நுட்பம் மூலம் 2030-க்குள் நாட்டை உயர் […]

செய்தி விளையாட்டு

100 கோடி ரூபாய் நிதி மோசடியில் சிக்கிய பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான்

  • January 23, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அப்ரிடி (Babar Azam, Mohammad Rizwan and Shaheen Shah Afridi)ஆகியோர் கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடியில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “பொன்சி” (Ponzi) எனப்படும் அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டத்தின் பெயரில், சுமார் தற்போதைய 12 வீரர்கள் ஒரு பாகிஸ்தானிய தொழிலதிபரிடம் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில் லாபம் வழங்கிய அந்த நபர், தற்போது சுமார் 100 […]

உலகம்

ஜப்பானில் மீளவும் இயக்கப்பட்ட அணுமின் நிலையம் – எச்சரிக்கை ஒலி எழுந்ததால் பரபரப்பு!

  • January 23, 2026
  • 0 Comments

ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபுகுஷிமா பேரழிவிற்குப் பிறகு உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மறு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டன. காஷிவாசகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணுமின் நிலையத்தில் உள்ள ஆறாவது எண் அணு உலையைத் தொழிலாளர்கள் இயக்கிக் கொண்டிருந்தபோது கண்காணிப்பு அமைப்பிலிருந்து எச்சரிக்கை ஒலி வந்ததாகவும், இதனையடுத்து  செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை எனவும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (Tokyo Electric […]

செய்தி விளையாட்டு

யாழ்ப்பாணத்தில் T20 உலகக்கிண்ணத்தை காண வாய்ப்பு

  • January 23, 2026
  • 0 Comments

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானம் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகின்றது. இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் நேற்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதிவரை இந்த உலகக்கிண்ணம் இலங்கையில் பல்வேறு நகரங்களில் […]

error: Content is protected !!