இலங்கை

பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – ஹரிணி!

  • January 23, 2026
  • 0 Comments

பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான டாக்டர் ஹரிணி அமரசூரிய, நாட்டு மக்கள் மாற்றம் அவசியம் என்று முடிவு செய்தவுடன், பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகக் கூறினார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டப் பின் நாடு திரும்பிய அவர் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,   “அவர்கள் ஜனாதிபதியை நீக்கத் தவறிவிட்டனர். பின்னர் அவர்கள்  பிரதமரை நீக்க  […]

இலங்கை செய்தி

கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

  • January 23, 2026
  • 0 Comments

கேகாலை – அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவிசாவளை திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது இருவர் படுகாயமடைந்து கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் இவ்வாறு உயிரிழந்தார். கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு […]

இந்தியா செய்தி

தமிழக இளைஞர்களை திமுக போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது – மோடி

  • January 23, 2026
  • 0 Comments

தமிழக இளைஞர்களை திமுக அரசு போதைப் பொருள்  கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது  என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய போதே பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “தங்கள் கண் முன்னால் […]

திரௌபதி 2, சௌமியா அன்புமணி, மோகன் ஜி, ரிச்சர்ட் ரிஷி, சினிமா விமர்சனம், Draupathi 2, Sowmiya Anbumani, Mohan G, Movie Review Tamil. பொழுதுபோக்கு

‘திரௌபதி 2’ எப்படி இருக்கு? படம் பார்த்துவிட்டு சௌமியா அன்புமணி நெகிழ்ச்சி!

  • January 23, 2026
  • 0 Comments

சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்துப் படம் எடுக்கும் இயக்குநர் மோகன் ஜி-யின் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி தனது விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார். படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “திரௌபதி முதல் பாகத்தைப் போலவே இந்தப் பாகமும் சமூகத்திற்குத் தேவையான ஒரு கருத்தைச் சொல்கிறது,” என்று பாராட்டினார். மேலும் […]

ஐரோப்பா

நண்பரின் விசாவில் பிரித்தானியா செல்ல முயற்சித்த இலங்கை தமிழர்!

  • January 23, 2026
  • 0 Comments

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவர் ஒருவர், தனது விசா மற்றும் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி மற்றொரு நபருக்கு இங்கிலாந்து பயணம் செய்ய உதவிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய (KIA) பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டியை பிறப்பிடமாக கொண்ட ராஜகோபால் என்ற நபர் தனது விசா மற்றும் போர்டிங் பாஸை தனது நண்பர் சருஷன் குணசேகரனிடம் கொடுத்து அவரை பிரித்தானியாவிற்கு செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. பயணிகள் […]

இலங்கை செய்தி

அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு நாள் நிர்ணயம்!

  • January 23, 2026
  • 0 Comments

பெப்ரவரி மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆம் திகதி சுதந்திர தினம் என்பதால் சபை நடவடிக்கை இடம்பெறமாட்டாது. 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும். நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மேற்படி தகவலை வெளியிட்டார். ஜனவரி மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு இன்றுடன் நிறைவுக்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 10 பேரை கொன்ற செவிலியர் மீது வலுக்கும் சந்தேகம் – மறுபரிசீலனை செய்யப்படும் வழக்குகள்!

  • January 23, 2026
  • 0 Comments

மேற்கு ஜெர்மனியில் பத்து நோயாளிகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட  செவிலியர் ஒருவர் 100 பேரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான பல வழக்குகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், அதன்படி எண்ணிக்கை  அதிகரிக்கக்கூடும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். தடயவியல் பரிசோதனைகளுக்கு பிறகே உண்மையான செய்திகள் வெளிவரும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில், மேற்கு ஜெர்மனியின் ஆச்சனில் உள்ள  பிராந்திய நீதிமன்றம், 10 கொலைகள் மற்றும் 27 கொலை முயற்சிகளில் செவிலியர் ஒருவரை குற்றவாளியாக […]

இலங்கை செய்தி

டிட்வா பேரழிவு – Rebuilding Sri Lanka நிதியத்திற்கு 8.5 பில்லியன் நன்கொடை

  • January 23, 2026
  • 0 Comments

டிட்வா புயலுக்கு பிறகு மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக அமைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் (Rebuilding Sri Lanka) நிதியத்திற்கு கிடைக்கப் பெற்ற நன்கொடைகள் 8.5 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது உள்ளூர் வணிகங்கள் மற்றும் குடிமக்களிடமிருந்து வலுவான ஆதரவை பிரதிபலிக்கிறது. வெளிநாட்டு நன்கொடைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மொத்த தொகை 9.49 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக கூறினார். இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்தின் தற்போதைய நிலை […]

இலங்கை செய்தி

கல்வி சீர்திருத்தம் – காலியில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகம் நான்காவது நாளை எட்டியது

  • January 23, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்குள் கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தக் கோரி ஜனவரி 19 ஆம் திகதி காலியில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகம் இன்று (23) தொடர்ந்து நான்காவது நாளை எட்டியது. அமைச்சரவை இந்த விடயத்தில் உறுதியான முடிவை எடுக்கும் வரை பிரச்சாரம் தொடரும் என போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஆங்கில தொகுதியில் பொருத்தமற்ற வலைத்தளம் சேர்க்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு தொடர்பான கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் நடக்காது: ராஜித கருத்து!

  • January 23, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் என தான் நம்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்துக்கான மக்கள் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துவருகின்றது. எனவே, தேர்தல் நடத்தப்படும் என நான் நம்பவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணையும் என நம்புகின்றேன். இதற்கு சஜித் இணங்காவிட்டால்கூட இரு தரப்பு இணைவு நிச்சயம் நடக்கும்.” […]

error: Content is protected !!