நுவரெலியாவில் குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட காலநிலை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக, அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது நுவரெலியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் உறைபனிப் பொழிவும், பகல் நேரங்களில் வெப்பமான காலநிலையும், மாலை வேளைகளில் பனிமூட்டமும் என ஒரு மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. இந்த இதமான சூழலை அனுபவிப்பதற்காக இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை முதல் நுவரெலியா […]













