உலகம்

48 மில்லியன் ஜிமெயில் கணக்குகள் ஆன்லைனில் கசிவு – தரவு பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை!

  • January 25, 2026
  • 0 Comments

சுமார் 48 மில்லியன் ஜிமெயில் கணக்கு சான்றுகள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 149 மில்லியன் திருடப்பட்ட பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களைக் கொண்ட தரவுத்தளத்தை ஜெரேமியா ஃபோவ்லர் (Jeremiah Fowler) கண்டுப்பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கூகிள் செய்தித் தொடர்பாளர், “இந்தத் தரவு ‘இன்ஃபோஸ்டீலர்’ (infostealer)  பதிவுகளின் தொகுப்பைக் குறிக்கிறது, மூன்றாம் தரப்பு தீம்பொருளால் தனிப்பட்ட சாதனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகள், காலப்போக்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன,” எனத் […]

இலங்கை செய்தி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ; 2026 ஜனவரி முதல் நடைமுறையில்

  • January 25, 2026
  • 0 Comments

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததற்கமைய ஜனவரி மாதம் முதல் அந்தத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று (25) கொடக்கவெல பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு […]

இலங்கை செய்தி

தொழிற்சங்க போராட்டத்தை தொடரும் அரச வைத்தியர்கள்

  • January 25, 2026
  • 0 Comments

சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. தமது கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரண்டு நாட்களாக நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள், இன்று (25) காலை 8 மணியுடன் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டு வந்தனர். இருப்பினும், வைத்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் சுட்டுக்கொலை ; தப்பியோடிய கொலையாளியை தேடி வலைவீச்சு

  • January 25, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் ‘லேக் கார்ஜெல்லிகோ’ (Lake Cargelligo) நகரில் கடந்த 22 ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 7 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தற்போதைய துணைவர் உட்பட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான சோஃபி குவின் (Sophie Quinn) மற்றும் ஜான் ஹாரிஸ் (John Harris) ஆகியோர் வாகனத்தில் இருந்தபோது, அங்கிருந்தவாறே சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சோஃபியின் அத்தையும் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலை சோஃபியின் […]

ஆஸ்திரேலியா செய்தி

விக்டோரியா மாநிலத்தின் பல நகரங்களுக்கு அவசரகால எச்சரிக்கை

  • January 25, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக மோசமான வெப்ப அலை வீசி வரும் நிலையில், அங்கு கட்டுக்கடங்காத காட்டுத்தீயினால் பல நகரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக, ‘ஓட்வேஸ்’ (Otways) பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் ‘கெல்லிபிராண்ட்’ (Gellibrand) நகருக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டியுள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிலவரம் இன்னும் மோசமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மெல்போர்ன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீயின் […]

ஆஸ்திரேலியா செய்தி

எவ்வித பாதுகாப்பும் இன்றி 508 மீற்றர் உயர கோபுரத்தில் ஏறி அலெக்ஸ் ஹோனால்ட் சாதனை 

  • January 25, 2026
  • 0 Comments

உலகின் மிகச்சிறந்த ‘ப்ரீ சோலோ’ (Free Solo) மலையேற்ற வீரரான அலெக்ஸ் ஹோனால்ட் (Alex Honnold), தாய்வானின் தலைநகரில் அமைந்துள்ள 508 மீற்றர் உயரமான ‘தாய்ப்பே 101’ கோபுரத்தை எவ்வித கயிறுகளோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களோ இன்றி ஏறி உலகை வியக்க வைத்துள்ளார். நூற்றுக்கணக்கான மக்களின் உற்சாகக் குரல்களுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது பயணத்தை ஆரம்பித்த அவர், கட்டிடத்தின் வெளிப்புற உலோகத் தூண்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வெறும் கைகளால் உச்சியை அடைந்தார். மழை காரணமாக […]

உலகம்

மியன்மார் பொதுத் தேர்தலின் இறுதி சுற்று வாக்குப்பதிவு இன்று!

  • January 25, 2026
  • 0 Comments

மியன்மார் பொதுத் தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதி சுற்று வாக்குப்பதிவு இன்று (25) நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் இராணுவ ஆதரவு பெற்ற கட்சி மகத்தான வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இல்லை என்றும், நாட்டின் தற்போதைய இராணுவ ஆட்சியை சட்டப்பூர்வமாக்குவதற்காக நடத்தப்படுகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதியான  ஆங் சான் சூகி  வெளியேற்றப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து […]

இலங்கை செய்தி

யாழில் காய்ச்சல் காரணமாக ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

  • January 25, 2026
  • 0 Comments

யாழில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஆணொருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறை – ஹெலன்தோட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்ரி ஜெயானந்தன் யூட்கிமோசன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆரம்பக்கட்ட சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்ட போதிலும், காய்ச்சல் குறையாத காரணத்தினால் கடந்த 22ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு […]

இலங்கை

பௌத்த மதத்திற்கு எதிராக செயல்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு!

  • January 25, 2026
  • 0 Comments

தற்போதைய அரசாங்கம் தனது உயிர்வாழ்விற்காக உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மதங்களுக்கு எதிராக செயல்படத் தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் கே.டி. லால்காந்த தனது சமீபத்திய கருத்துகள் மூலம் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “கோட் அணிந்திருப்பவர்களைத் தாக்குவேன் என்று அமைச்சர் லால்காந்த கூறியுள்ளார். மேலும், காவி அங்கி அணிபவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்கவில் 13 கோடி ரூபா போதைப்பொருளுடன் மூவர் கைது

  • January 25, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ (Kush) மற்றும் ‘ஹஷிஷ்’ (Hashish) போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று அதிகாலை 4.00 மணியளவில் ‘சலாம் எயார்’ (Salam Air) நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் வந்திறங்கிய பயணிகளையே இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். […]

error: Content is protected !!