இங்கிலாந்தில் தற்காலிக குடியிருப்புகளில் வாழும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு
இங்கிலாந்தில் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷெல்டர் (Shelter) அமைப்பு மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆய்வில், சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகள் தற்காலிக வீடுகளில் வசிப்பது தெரியவந்துள்ளது. முறையான வசதிகள் இல்லாததால், பள்ளிகளே மாணவர்களுக்கு உணவுக் களஞ்சியங்களைப் பரிந்துரைப்பதோடு, அவர்களின் சீருடைகளைத் துவைத்துக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சுமார் 49 சதவீத பள்ளிகள் மாணவர்களை உணவுக் களஞ்சியங்களுக்கு அனுப்பி வருகின்றன. ஈஸ்ட் […]













