உலகம்

ஒபாமாக்களை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியை வெளிட்ட ட்ரம்ப் – உலக தலைவர்கள் கடும் கண்டனம்!

  • February 6, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான , பராக் ஒபாமா மற்றும் அவரின் துணைவியார்  மிஷெல் ஒபாமாவை குரங்குகளாக சித்திரிக்கும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி இனவெறியை வெளிப்படுத்துவதாக பரவலாக விமர்சிக்கப்பட்டு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் நீளமான காணொளியின் முடிவில், முன்னாள் ஜனாதிபதி பராக் மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மிஷலின் முகங்கள் குரங்குகளின் உடல்களில் இணைக்கப்பட்டுள்ளன. தி லயன் ஸ்லீப்ஸ் டுநைட் (The Lion Sleeps Tonight) என்ற […]

அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றில் நாமலை கிழித்து தொங்கவிட்ட பெண் எம்.பி.!

  • February 6, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சமீது Namal Rajapaksa , நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார் ஆளுங்கட்சி எம்.பியான   லக்மாலி lakmali hemachandra இனவாத அரசியலை முன்னெடுக்கும் கூட்டம் எனவும் அவர் விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லக்மாலி எம்.பி. கூறியவை வருமாறு, “ இனத்துக்காகவும், மதத்துக்காகவும் முன்னிலையாகும் அரசியல்வாதி தான்தான் என காட்டிக்கொள்வதற்கு நாமல் ராஜபக்ச முற்படுகின்றார். தெற்கில் வாக்குகேட்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் வருவதற்கு தற்துணிவற்ற நபரே […]

இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகளுக்கு பிணை

  • February 6, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர்இன்று (06) பிற்பகல்  ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட பணத்தை முறையற்ற வழிகளில் கையாள்வதற்கு  உதவியமை மற்றும் அதற்கு உடந்தையாக […]

உலகம்

வடகொரியாவில் கடுமையாகும் மரண தண்டனை – பணம் படைத்தவர்களுக்கு மட்டும் விலக்கு?

  • February 6, 2026
  • 0 Comments

நெட்ஃபிளிக்ஸின் ஸ்க்விட் கேம் (Squid Game) உள்ளிட்ட தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பதற்கும், கே-பாப் ( K-Pop) இசையைக் கேட்பதற்கும் வடகொரியா தடை விதித்துள்ளது. அரசின் தடையை மீறி இதனை பார்க்கும் மாணவர்களுக்கு மரண தண்டனை விதித்து வருவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனலுடன் ( Amnesty International) பகிரப்பட்ட புதிய சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிவந்து வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 25 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவில் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி கண்டிக்கு கூட ஹெலிகொப்டரில் தான் பயணம் – எதிர்கட்சி விமர்சனம்

  • February 6, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முதன்முறையாக கண்டிக்கு ஹெலிகொப்டரில் பயணம் செய்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று நாடாளுமன்றத்தில் விமர்சித்தார். ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் உத்தியோகபூர்வ பயணங்களுக்கு ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவதை விமர்சித்ததையும் அவர் நினைவுபடுத்தினார். ஆனால் தற்போது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் அவர் மகிழ்ச்சி அடைவதாகவும், அது ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்ற முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார். “ஜனாதிபதி இப்போது ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது நல்ல விடயமே. அது அவருடைய பணிகளுக்கு அவசியமானது […]

ஐரோப்பா

ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு!

  • February 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரியான விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev) மீது இன்று துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவில் வடமேற்கு புறநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் GRU இராணுவ உளவுத்துறையின் முக்கிய இயக்குநரகத்தில் அலெக்ஸீவ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் சாலிஸ்பரியில் 2018 ஆம் ஆண்டு நடந்த நரம்பு மண்டல தாக்குதலுக்குப் பின்னால் GRU இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் […]

இலங்கை செய்தி

டிட்வா புயல் தாக்கத்திற்கு மத்தியிலும், இலங்கையின் பொருளாதாரம் சிறந்த நிதி ஒழுக்கத்துடன் பேணப்பட்டு வருகிறது

  • February 6, 2026
  • 0 Comments

டிட்வா (Ditwa) புயல் தாக்கத்திற்கு மத்தியிலும், இலங்கையின் பொருளாதாரம் சிறந்த நிதி ஒழுக்கத்துடன் பேணப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) நடைபெற்ற “செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் யுகத்தில் பொருளாதார வளர்ச்சி” என்ற தலைப்பிலான மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் , “மேலதிக செலவுகள், அரசாங்கத்தின் கடன் வாங்கல் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவதாக […]

உலகம்

பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி, பலர் வைத்தியசாலையில்!

  • February 6, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது மேற்படி குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் மற்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். வெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை, இருப்பினும் தாலிபான் அல்லது இஸ்லாமிய அரசு குழு போன்ற […]

இலங்கை செய்தி

வரலாற்றில் முதன்முறையாக இலங்கை போக்குவரத்து சபையில் பெண் நடத்துநர்கள்

  • February 6, 2026
  • 0 Comments

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (6) நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, புதிதாக நியமிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

  • February 6, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் […]

error: Content is protected !!