உலகம்

ஈரான் அமெரிக்கா இடையே போர் மூளுமா? கசிந்த இரகசிய தகவல்!

  • February 7, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் ஓமனில் இடம்பெற்ற சந்திப்பு நல்லவொரு ஆரம்பத்தை தந்துள்ளதாக வெளியுறவு செயலாளர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ள போதிலும் மறைமுகமாக இரு நாடுகளும் போருக்கு தயாராகி வருவதாக மேற்குலக நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே இடம்பெற்ற மறைமுக சந்திப்புகள் இதனை புலப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தெஹ்ரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை போருக்குத் தயாராகி வருவதாக தோன்றியதால், அமெரிக்க போர் இயந்திரம் மோதலுக்குத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கமைய தெஹ்ரானில் […]

ஆஸ்திரேலியா

இஸ்ரேல் ஜனாதிபதி நாளை ஆஸ்திரேலியா விஜயம்!

  • February 7, 2026
  • 0 Comments

  இஸ்ரேல் ஜனாதிபதி Israeli President Isaac Herzog நாளை ஆஸ்திரேலியாவுக்கு Australia பயணம் மேற்கொள்கின்றார். அவரது பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் பயணமாக ஆஸ்திரேலியா வரும் அவர், முக்கிய பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். ஆஸ்திரேலியா பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். ஆஸ்திரேலியாவில் சிட்னி, போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான இராஜதந்திர […]

இலங்கை செய்தி

அவசரகால சட்டத்துக்கு எதிராக இரு தமிழ் எம்.பிக்கள் மட்டுமே வாக்களிப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணைக்கு எதிராக இரு தமிழ் எம்.பிக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மட்டும் எதிராக வாக்களித்தனர். டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரை அடுத்து கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதையடுத்து அரசாங்கம் நாடாளுமன்ற அனுமதியுடன் அவசரகாலச் சட்டத்தை மாதம் தோறும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீது நேற்று […]

உலகம்

பராக் ஒபாமா காணொளி விவகாரம் – நான் குறைந்த இனவெறிக் கொண்ட ஜனாதிபதி : ட்ரம்ப்!

  • February 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரின் துணைவியாரை உருவ கேலி செய்து சித்தரிக்கப்பட்ட வீடியோ தொடர்பில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். வாக்காளர் மோசடி பற்றிய ஆரம்ப பகுதியை மட்டுமே தான் பார்த்ததாகவும், மீதமுள்ள பகுதியை தனது ஊழியர்களிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்த அவர், இந்த விடயத்திற்கு மன்னிப்பு கோர மறுத்துவிட்டார். அத்துடன் தான் “குறைந்த இனவெறி கொண்ட ஜனாதிபதி” என்றும், சிறுபான்மை வாக்காளர்களுக்கு வேறு எந்த ஜனாதிபதியையும் விட அதிகமாக செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் […]

அரசியல் இலங்கை செய்தி

திருமலையில் பிக்குகளுக்கு எதிராக அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டதா?

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்தின்போது அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya நிராகரித்தார். சாதாரண சட்டத்தின்கீழேயே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நேற்று SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டது. அவசர கால சட்டம், அடக்குமுறைக்காக பயன்படுத்தப்பட்டது எனவும், திருகோணமலையில் பிக்குகள்கூட அச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டனர் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma […]

உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் – மிரட்டும் ட்ரம்ப்!

  • February 7, 2026
  • 0 Comments

ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அணுசக்தி தொடர்பில் ஓமானில் நேற்று இடம்பெற்ற  பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இந்த செய்தி வந்துள்ளது. இருப்பினும் எத்தனை வீதம் வரி விதிக்கப்படும் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் சுமார் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானிடமிருந்து பொருட்கள் அல்லது சேவைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்கும், இறக்குமதி […]

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

  • February 7, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கு விசாரணைக்காக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. எனினும், வழக்கு விசாரணைக்காக […]

விளையாட்டு

20 அணிகள்: 55 ஆட்டங்கள்! : T-20 உலகக்கிண்ண தொடர் ஆரம்பம்!

  • February 7, 2026
  • 0 Comments

கிரிக்கெட்டி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி ஆடவர் ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகின்றது. 20 அணிகள் பங்கேற்கும் மேற்படி தொடரை தெற்காசிய நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சியை தக்க வைக்க சூழ்ச்சி: டில்வின் சில்வா மறுப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என்று ஜே.வி.பியின் JVP செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார். அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்போம். அதனை செய்வதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் ஆசியுடன் ஆட்சியை தொடரவே விரும்புகின்றோம். மாறாக மக்கள் விருப்பமின்றி – […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலை குண்டு வெடிப்பு – 31 பேர் பலி

  • February 6, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று ஜும்மா தொழுகை நடைபெறும்போது, ஒரு  மசூதியில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 31 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 169 பேர் காயமடைந்துள்ளனர். தர்லாய் பகுதியில் உள்ள கதீஜாதுல் குப்ரா மசூதியின் நுழைவாயில் அருகே குண்டுதாரி வெடிவிபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். வெடிப்புக்கு முன் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, […]

error: Content is protected !!