இந்தியா

அரியணையேறுகிறார் தாரிக் ரஹ்மான்: பிரதமர் மோடி வாழ்த்து!

  • February 13, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. Bangladesh Nationalist Party (BNP) தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமராக பதவியேற்கவுள்ள தாரிக் ரஹ்மானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற 13வது பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. சுமார் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் Tarique Rahman தலைமையிலான BNP கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுள்ளது. தாரிக் ரஹ்மான் , பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலீதா […]

இலங்கை செய்தி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி – நகைப்பிரியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (13) தங்கத்தின் விலை 5000 ரூபாயால் குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48,750 இற்றும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் செய்தி

உக்ரைனுக்கு பிரான்ஸ் அமைச்சரின் விஜய நாளில் ரஷ்யா மாபெரும்  தாக்குதல் –  மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு

  • February 13, 2026
  • 0 Comments

பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கியேவுக்கு விஜயம் செய்த நாளிலேயே, ரஷ்யா உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து பெருமளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி 07ஆம் திகதி நடைபெற்ற இந்த தாக்குதல், அதற்கு சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 03ஆம் திகதி NATO (நேட்டோ) பொதுச்செயலாளர் Mark Rutte (மார்க் ருட்டே) உக்ரைனுக்கு வந்திருந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. இந்த தாக்குதல்கள் வெறும் அரசியல் எச்சரிக்கை அல்ல என்றும் திட்டமிட்ட இராணுவ மூலோபாயத்தின் ஒரு […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 01  முதல்  2.5  சதவீதம் வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த வரி 2026 வரவு செலவு திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றும், தற்போது தீர்வு செயல்முறைக்கு உட்பட்ட வாகனங்களை இது பாதிக்காது என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் (VIASL) தெரிவித்துள்ளார்.  இந்த வரி இலங்கை சுங்கத்தால் நேரடியாக வசூலிக்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ஒரு வாகனத்தின் அதிக மதிப்பு […]

ஐரோப்பா செய்தி

பேச்சு சுதந்திரத்திற்கு மாபெரும் வெற்றி – பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு

  • February 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பலஸ்தீன ஆதரவு பிரச்சார அமைப்பான  பலஸ்தீன் ஆக்ஷன் (Palestine Action)  ஐ பயங்கரவாதக் குழு என வகைப்படுத்தி தடை செய்த அரசாங்கத்தின் முடிவு சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த முக்கிய தீர்ப்புக்கு பதிலளித்த அமைப்பின் இணை நிறுவனர் ஹுடா அம்மோரி (Huda Ammori) இது  பிரித்தானியாவில் அடிப்படை சுதந்திரங்களுக்கும், பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கும் கிடைத்த பெரிய வெற்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தடை முடிவு, சமீபத்திய […]

செய்தி

பிரேரணையைக் கிழித்தெறிந்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

யாழ்.மாநகரசபையின் Jaffna Municipal Council இன்றைய அமர்வின்போது ஈ.பி.டி.பி. E.P.D.P. உறுப்பினர்கள் பிரேரணையைக் கிழித்தெறிந்து சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அப்பிள் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை தொடர்ந்தே ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் இவ்வாறு செயல்பட்டனர். இன்றைய சபை அமர்வின் போது இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள், முறையான மாற்றுத் திட்டம் அல்லது பொறிமுறை இன்றி இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டுவரக் கூடாது என வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் […]

இலங்கை செய்தி

யாழ். மாநகரசபைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

யாழ். நகர அப்பிள் apple கடை வியாபாரிகள் இன்று மாநகர சபை நுழைவாயிலுக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மத்திய பஸ் நிலையச் சூழலில் அமைந்துள்ள அப்பிள் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நகரில் அமைந்துள்ள அப்பிள் கடைகளின் செயற்பாடுகள் தொடர்பாக உறுப்பினர் ப.தர்சானந்த் சபையில் முன்வைத்த பிரேரணையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட […]

இலங்கை செய்தி

கறுப்பு கொடி பறக்கவிடுவது தவறு கிடையாது: யாழ்.பல்கலை மாணவர்களுக்காக சுரேஷ் களத்தில்!

  • February 13, 2026
  • 0 Comments

“யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என்ற பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது.” இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ்  பிரேமச்சந்திரன் Suresh  Premachandran தெரிவித்துள்ளார். போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத்தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அவர் வலியுறுத்தியுள்ளார். “இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் […]

விளையாட்டு

சிம்பாப்வேயிடம் மண்டியிட்டது ஆஸ்திரேலியா!

  • February 13, 2026
  • 0 Comments

கிரிக்கெட் உலகில் பலம்பொருந்திய அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவை Australia சிம்பாப்வே Zimbabwe அணி தோற்கடித்துள்ளது. T20 உலக்கிண்ண தொடரில் 19 ஆவது லீக் ஆட்டம் கொழும்பு ஆர். பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. Brian Bennett ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களைப் […]

இலங்கை

தற்கொலை மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!

  • February 13, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலை களமொன்றிலும் , உளநலப் பிரிவிலும் இடம்பெற்ற மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் உள்ள உள நலப்பிரிவில் கிண்ணியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட விதத்தில் பல்வகையான கருத்துக்கள் பேசப்பட்டு வந்தன. ஆனாலும் உளநல பிரிவில் நோயாளர்களை அனுமதிக்கும் போது அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடமையாற்றுகின்றவர்கள் […]

error: Content is protected !!