ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பல் மருத்துவ சேவையில் பெரும் நெருக்கடி – நோயாளர்கள் பெரும் சிரமம்

  • February 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பொதுச் சுகாதார அமைப்பின் பல் மருத்துவ சேவையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமை மிக மோசமாக காணப்படுவதால், ஏழை நாடுகளில் மருத்துவ சேவைகள் வழங்க உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனமொன்று தற்போது பிரித்தானியாவிற்கே அதிக சேவையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மில்லியன் கணக்கான மக்கள் பொதுச் சுகாதார அமைப்பின் பல் மருத்துவ சேவைகளை அணுக சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான வருமானம் பெறுவோரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுச் சுகாதார அமைப்பில் பல் […]

இலங்கை செய்தி

14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டம்: கொழும்பில் நாளை அணிதிரளும் சட்டத்தரணிகள்!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டமொன்று நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள பின்புலத்திலேயே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்பு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகே இவ்வாறானதொரு விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல் சம்பவத்தை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்ட பனிச்சரிவு : இரு பிரித்தானியர்கள் உயிரிழப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவில்  சிக்கி உயிரிழந்த வீரர்களில் இரண்டு பிரித்தானிய வீரர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பிரான்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று  பனிச்சரிவு ஏற்பட்டது. இதன்போது 05 பேர் கொண்ட குழுவொன்று சிக்கிக் கொண்டதாகவும், அதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பிரித்தானிய வீரர்களும் ஒரு பிரெஞ்சு வீரரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆல்ப்ஸ் மலைகளில் “மிகக் கடுமையான பனிப்பொழிவு” “விதிவிலக்கான பனிச்சரிவு நிலைமைகளைத் தூண்டியுள்ளது” என்று பிரான்ஸின் வானிலை சேவை […]

இலங்கை

இந்தியா – பாகிஸ்தான் போட்டி : பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நாளைய தினம் கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் போட்டியை காண வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மைதானத்திற்குள் இசைக்கருவிகள், தலைக்கவசங்கள், ஜாக்கெட்டுகள், கண்ணாடி பாட்டில்கள், பெரிய பயணப் பைகள், மதுபானங்கள், கத்திகள், கூர்மையான பொருட்கள், ட்ரோன்கள் மற்றும் மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும், மேலும் […]

இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!

  • February 14, 2026
  • 0 Comments

தென்னிலங்கையில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டை இடம்பெற்றுவருகின்றது. இதற்காக 10 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளனர். ஜீப் வாகனத்தின் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவிமீதும் துப்பாக்கிச்சூடு […]

உலகம் முக்கிய செய்திகள்

கனடா துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த நபரின் சாட்சியம்!

  • February 14, 2026
  • 0 Comments

கனடாவில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த ஒருவர் இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கமைய 18 வயதான தாக்குதல்தாரி தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யும் இலக்குடன் பாடசாலைக்குள் நுழைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். அதாவது ஏனையவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக அவர் தனது தாயையும், வளர்ப்பு சகோதரனையும் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார். அதற்கு பின்னர் ஐந்து மாணவர்களையும் ஒரு ஆசிரியரையும் சுட்டுக் கொன்றதோடு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். இந்தத் […]

இலங்கை செய்தி

உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைத் தொடர்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை சரியான நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்–இலங்கை கூட்டு ஆணையம் 27வது அமர்வு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றபோது இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 முக்கிய சர்வதேச உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவற்றின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காலமுறைப்படி […]

உலகம்

அமெரிக்காவை பார்த்து உலகம் அஞ்சுகிறது – ட்ரம்ப் பெருமிதம்!

  • February 14, 2026
  • 0 Comments

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்றுவதில் சிறப்புப் படைகளின் பங்களிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். ஊடகங்கள் முன்னிலையில் நேற்று கருத்து வௌயிட்ட அவர், “அமெரிக்காவின் முழு இராணுவ வலிமையால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்கூறியுள்ளதாகவும், தற்போது உலகெங்கிலும் உள்ள எதிரிகள் அமெரிக்காவை பார்த்து அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன்  அமெரிக்க இராணுவத்தை “மிகவும் உயரடுக்கு சண்டைப் படையாக” பராமரிக்கவும் உறுதியளித்துள்ளார்.  இதேவேளை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னதாக ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி […]

அரசியல் இலங்கை செய்தி

அறகலயவுக்கு ராஜபக்சக்களே ஆரம்பபுள்ளி வைப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

அமைதியாக நடந்த அறகலயமீது தாக்குதல் நடத்தி குழப்பம் ஏற்படுவதற்கு ராஜபக்ச தரப்பே ஆரம்பபுள்ளி வைத்தது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க Wasantha Samarasinghe தெரிவித்தார். “ அமைதியாக நடைபெற்ற போராட்டம்மீது ராஜபக்ச தரப்பு தாக்குதல் நடத்தியதாலேயே அறகலய வெடித்தது. எனவே, குழப்பம் ஏற்பட்ட பின்னர் நடந்த சம்பவங்களைபோன்ற, அதற்கு முன்னர் இடம்பெற்றவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும். எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கும். அது தொடர்பில் பிரச்சினை இருந்தால் மேன்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தில் இருக்கும் […]

இந்தியா

டெல்லியுடன் உறவை வலுப்படுத்த டாக்கா பச்சைக்கொடி!

  • February 14, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party நன்றி தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகமே தேர்தலில் வென்ற கட்சி இவ்வாறு நன்றி கூறியுள்ளது. பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 299 இடங்களில், பங்களாதேஷ் தேசியவாத கட்சி BNP தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு Tariq Rahman வாழ்த்துகள் […]

error: Content is protected !!