இலங்கை

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (ஜுலை 06) காலை 11 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி அம்பகமுவ பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தேவையேற்பட்டால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும், கடும் மழை மற்றும் காற்று காரமாணக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் இன்றும் (06), நாளையும் (07) இரு தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  மேலதிக இரண்டு தினங்களுக்கு பாடசாலையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.பி.எல்.அபேரத்ன தெரிவித்தார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!