வட அமெரிக்கா

ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவி : இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

உக்ரேனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதற்காக சில 15 இந்திய நிறுவனங்கள் உட்பட கிட்டத்தட்ட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

“ரஷ்யாவின் சட்டவிரோதப் போரைத் தொடர உதவும் கிட்டத்தட்ட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையில், 120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வெளியுறவுத்துறை தடைகளை விதிக்கிறது,” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை கூறியது.

மேலும், நிதித்துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடைகளை விதிக்கிறது. வர்த்தகத் துறையும் அதன் தடைப் பட்டியலில் 40 நிறுவனங்களைச் சேர்த்துள்ளது.

இந்திய நிறுவனங்கள்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பல்வேறு சட்ட விதிமுறைகளை மீறியதாக பல இந்திய நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களில் ஒன்று அசெண்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டெட். இது மார்ச் 2023 மற்றும் மார்ச் 2024க்கு இடையில் ரஷ்யாவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு 700 ஏற்றுமதி தொகுப்புகளை அனுப்பியது.

டி.எஸ்.எம்.டி. குளோபல் பிரைவேட் லிமிட்டெட் என்ற இந்தியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமும் ர‌ஷ்யாவுக்குப் பொருள்களை அனுப்பியது.

இந்தியாவைத் தவிர சீனா, மலேசியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு சிற்றரசு உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!