செய்தி தென் அமெரிக்கா

பிரேசிலை உலுக்கிய கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி 90 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தெற்குப் பகுதிகளை கடும் மழை உலுக்கியுள்ளது.

அங்கு பெய்த பெருமழையால் ரியோ கிராண்ட் சுல் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர்.

கட்டிடங்களின் மேற்கூரையில் தஞ்சமடைந்திருக்கும் ஏராளமானோர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

போர்ட்டோ அல்க்ரேவில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்டொராடோ சுல் பகுதிகளில் பலர் வீடிழந்து சாலையோர பிளாட்பாரங்களில் தங்கியபடி உணவுக்காக காத்திருக்கின்றனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க குறுகிய தெருக்களில் படகுகளில் மீட்புப் படையினர் சென்று வீடு வீடாக தேடி வருவதுடன் ஹெலிகாப்டரிலும் தேடுதல் பணி நடக்கிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!