இலங்கையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்!

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் தொழில் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க நிதியமைச்சு விரைவில் தலையிடாவிட்டால் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் தெரிவிக்கையில், தமது பிரச்சினைகளுக்கு அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.
(Visited 12 times, 1 visits today)