ஐரோப்பா

லண்டனில் சிறுமியை அடைத்து வைத்து பரபரப்பை ஏற்படுத்திய தமிழர்

லண்டன் ஹாரோ பகுதியில் உள்ள கடை ஒன்றில் சிறுமியை அடைத்து வைத்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றது.

Greenford பகுதியில் உள்ள Hurley வீதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் பூவேந்திரநாதன் என்பவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இரவு 9 மணிக்கு, பின்னரின் Uxbridge வீதியில் உள்ள Star News and Wine கடைக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

ஒரு பெண் கடையில் அடைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், 14 வயது சிறுமி காயமின்றி இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஆனால் அவர் சுமார் 10 நிமிடங்களுக்கு கடையில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 59 வயதான பூவேந்திரநாதன் என்பவரை பொலிஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

அவருக்கு டிசம்பர் 18 ஆம் திகதி ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

(Visited 4 times, 4 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content