இலங்கை

ஹங்குரன்கெத்த சம்பவம் – மேலும் 8 சந்தேக நபர்கள் இன்று கைது!

ஹங்குரன்கெத்த – உடவத்தகும்புர பிரதேசத்தில் இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 8 சந்தேக நபர்கள் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 முதல் 63 வயதுக்கு இடைப்பட்ட மதுரட்ட, ரிகில்லகஸ்கடவல மற்றும் உடவத்தகும்புர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை காணித் தகராறொன்றில் ஒரு குழுவினரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் 23 வயதான இளைஞரும் அவரது தந்தையும் காயமடைந்தனர்.

நான்கு நாட்களுக்கும் மேலாக கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிய இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக பெண்ணொருவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இந்தநிலையில், நேற்றிரவு இளைஞரின் மரணத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள், தலைமறைவாக இருந்த எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்யாதமைக்கு அதிருப்தி தெரிவித்து ஹங்குரன்கெத்த காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

அதன்போது, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, அங்கு கூடியிருந்த பிரதேசவாசிகளை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் சுமார் 38 எச்சரிக்கை துப்பாக்கிப் பிரயோகங்களை வானத்தை நோக்கி நடத்தியிருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!