ஆப்பிரிக்கா

சூடானின் அபிபீயில் ஆயுததாரிகள் தாக்குதல் : பலர் படுகொலை!

சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் எண்ணெய் வளம் மிக்க பகுதியான அபியீயில் உள்ள கிராமவாசிகள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதுடன்,  64 பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் வெளியாகாத நிலையில், நிலப்பிரச்சினை பிரதான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

நுயர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய இளைஞர்களே மேற்படி தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 31 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு