உலகம் செய்தி

வளைகுடா நாடுகளும் ஈரானும் இணைந்து வாழ்வதே ஒரே வழி – கட்டார்

வளைகுடா நாடுகளும் ஈரானும் எதிர்காலத்தில் இணைந்து வாழ்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அல்-அன்சாரி (al Ansari) தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பிராந்திய மக்களுக்கிடையே ஆழமான வரலாற்று மற்றும் சமூக பிணைப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஈரான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு உள்ளது. இந்தப் பிராந்திய மக்களும் அதேபோன்று நீண்ட காலமாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். யாரும் எங்கும் செல்லப் போவதில்லை. முழுமையான அழிவு என்பது ஒரு தெரிவாக இருக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

மேலும், மனிதகுலத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அண்டை நாடுகள் ஒருவருக்கொருவர் இணைந்து வாழ வேண்டியது அவசியம் எனவும், அதற்கான வழிகளை தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!