உலகம்

இஸ்ரேலுக்குச் செல்ல 100 ஆண்டு தடையுடன் வீடு திரும்பிய கிரெட்டா தன்பர்க்

இஸ்ரேலிலிருந்து நாடு கடத்தப்பட்ட சமூக ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் சுவீடனுக்குத் திரும்பியுள்ளார்.

அவர் உட்பட 12 பேர் கப்பல் வழியாக காஸாவிற்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல முயன்ற போது இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் கப்பலை வழிமறைத்தன.

தங்களை இஸ்ரேல் கடத்தியதாக 22 வயது கிரெட்டா குற்றஞ்சாட்டினார். காஸாவில் நடத்தப்படும் இனப்படுகொலையைப் பற்றி மக்கள் அமைதியாக இருப்பது அச்சமூட்டுவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்ரேல் தொடர்ந்து போர்க் குற்றங்களைப் புரிவதாகவும் அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகவும் அவர் கூறினார்.

காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாகப் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
விளம்பரம்

இஸ்ரேல் மறுக்கிறது. கப்பலில் இருந்த 12 பேரில் 8 பேர் இஸ்ரேலைவிட்டு வெளியேற மறுத்தனர். தன்பர்க் உட்பட 4 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் அனைவர் மீதும் இஸ்ரேல் 100 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

(Visited 14 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்