இஸ்ரேலுக்குச் செல்ல 100 ஆண்டு தடையுடன் வீடு திரும்பிய கிரெட்டா தன்பர்க்

இஸ்ரேலிலிருந்து நாடு கடத்தப்பட்ட சமூக ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் சுவீடனுக்குத் திரும்பியுள்ளார்.
அவர் உட்பட 12 பேர் கப்பல் வழியாக காஸாவிற்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல முயன்ற போது இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் கப்பலை வழிமறைத்தன.
தங்களை இஸ்ரேல் கடத்தியதாக 22 வயது கிரெட்டா குற்றஞ்சாட்டினார். காஸாவில் நடத்தப்படும் இனப்படுகொலையைப் பற்றி மக்கள் அமைதியாக இருப்பது அச்சமூட்டுவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்ரேல் தொடர்ந்து போர்க் குற்றங்களைப் புரிவதாகவும் அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகவும் அவர் கூறினார்.
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாகப் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
விளம்பரம்
இஸ்ரேல் மறுக்கிறது. கப்பலில் இருந்த 12 பேரில் 8 பேர் இஸ்ரேலைவிட்டு வெளியேற மறுத்தனர். தன்பர்க் உட்பட 4 பேர் வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் அனைவர் மீதும் இஸ்ரேல் 100 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.