இலங்கை செய்தி

அரச வைத்திய அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பு – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நோயாளர்கள் பெரும் சிரமம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு வருகைதந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (23) ஆரம்பிக்கப்பட்ட பணிபகிஷ்கரிப்பு ,இன்றைய தினமும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த நான்கு தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கையெடுக்ககோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று முன்தினம் அதற்கான தீர்வு காணப்பட்ட நிலையில் மீண்டும் அரச வைத்திய அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கும் வகையில் பணிபகிஸ்கரிப்பு இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆரம்ப வைத்திய சேவை பிரிவு மற்றும் கிளினிக் சேவைகளில் வைத்தியர்கள் வருகை தராத காரணத்தினால் நீண்ட தூரம் பயணித்து வருகைதந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதை காணமுடிந்தது.

தமது கோரிக்கைக்கான சாதகமான தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு தமது சங்கம் ஆதரவு வழங்கவில்லையெனவும் வழமைபோன்று தமது வைத்தியர்கள் சேவைகளில் ஈடுபட்டுவருவதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்க மட்டக்களப்பு கிளை அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!