வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறிய கோட்டாபய!
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று (17) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.




