ஐரோப்பா

ஜெர்மனியில் கற்கின்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் கற்கின்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மன் அரசாங்கமானது பல்கலைகழகத்தில் புதிதாக கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு சில நிதி சலுகைகளை செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பல்கலை கழக மாணவர்கள் தாங்கள் பல்கலைகழகங்களில் கல்வி கற்கும் பொழுது கடன் விடயத்தில் கூடுதலான பணத்தை அவர்களுக்கு வழங்குவதற்குரிய வகையில் சட்டத்தை மிக விரைவில் இயற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் ஏற்கனவே ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தின் படி சமூக உதவி பணத்தில் வாழுகின்ற பல்கலைகழக மாணவர்கள் புதிதாக பல்கலைகழகங்களுக்கு செல்லும் பொழுது ஸ்டாட் கிள்ஃபெரெட் என்று சொல்லப்படுகின்ற ஆரம்ப உதவியாக அரசாங்கமானது 1000 யூரோக்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இவ்வாறு பெற்றோர் சமூக உதவி பணத்தை பெற்று வாழுகின்ற பொழுது குறித்த குடும்பத்தில் வாழும் பல்கலைகழக மாணவனும் சமூக உதவி பணத்தை பெற்றால், இவர் இவ்வகையான 1000 யூரோக்களுக்கு வருகின்ற இலை உதிர் காலங்களில் பல்கலைகழக ஆரம்பத்தின் பொழுது விண்ணப்பிக்க முடியும் என்றுமு் தெரியவந்துள்ளது.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!