நாளுக்கு நாள் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் -ஒரே நாளில் இரு தடவைகள் விலை உயர்வு
உலக சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு பவுண் தங்கம் 5,000 ரூபாவால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





