உலகம்

பிரேசிலில் கோர விபத்து – 9 பேர் பலி – 20க்கும் அதிகமானோர் படுகாயம்

பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலையில் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து ரியோ டி ஜெனீரோவிலிருந்து (Rio de Janeiro) போர்ட்டோ செகுரோவுக்குச் (Porto Seguro) சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

பேருந்தில் 34 பேர் இருந்தனர். காயமுற்றவர்களின் நிலை குறித்து தகவல் இல்லை.

அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியிடப்படவிலை.

பேருந்தில் 2 ஓட்டுநர்கள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் எந்தக் காயமும் இல்லை என்றனர் அதிகாரிகள்.

பிரேசிலில் பேருந்து விபத்துகள் அடிக்கடி நேர்வதுண்டு. உலகில் மிகப் பெரிய நிலப் பரப்பளவைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. அது தரைப் போக்குவரத்து வசதியை அதிகம் நம்பியிருக்கிறது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!