உலகம்

உலக வெப்பமயமாதலால் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் ஆபத்தில்

உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை, வேலைக்குச் செல்கின்ற மக்களின் உடல்நலத்துக்கும் செயல்திறனுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என ஐ.நா எச்சரித்துள்ளது.

அதிக வெப்பத்தால், திறந்தவெளியில் மற்றும் குளிரூட்டப்படாத அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றது.

உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், ஐ.நா. அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

20 டிகிரி செல்சியஸை கடந்தபின், ஒவ்வொரு கூடுதல் டிகிரிக்கும் ஊழியர்களின் செயல்திறன் 2% முதல் 3% வரை குறைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடல் நலத்தைக் குன்றச் செய்வதோடு, நிறுவனங்களின் உற்பத்தித்திறனையும் பாதிக்கும் நிலையில் உள்ளது.

மிகை வெப்பத்தால் வெப்பத்தாக்கம், வெப்ப உறிஞ்சம், சிறுநீரக செயலிழப்பு போன்ற உடல்நல பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், இது வெறும் சுகாதார சிக்கலாக மட்டுமல்லாமல், உலகளாவிய பொருளாதாரத்தைப் பாதிக்கும் அபாயமாகவும் மாறி வருகிறது என்று ஐ.நா. தெரிவித்தது.

இந்நிலையில், அரசாங்கங்கள், நிறுவன உரிமையாளர்கள், மற்றும் சுகாதார துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும், வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள வழிகாட்டி முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!