செய்தி விளையாட்டு

மன ஆதரவை கொடுங்கள் – சனத் வேண்டுகோள்

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நாளை (02) நடைபெறவுள்ளது.

இதில் வீரர்களுக்கு மனரீதியாக அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு விளையாட்டு ரசிகர்களை சனத் ஜயசூரிய கேட்டுக்கொள்கிறார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நாளை ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் குறித்து இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

06 இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக கடமையாற்றும் சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய,

“பினுர பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, துஷ்மந்த சமிர, மதிஷ பத்திரன, லஹிரு குமார, நுவன் துஷார ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

03 போட்டிகள் கொண்ட இந்திய-இலங்கை ஒருநாள் தொடரில் ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டி நாளை பகல் இரவு போட்டியாக கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content