ஐரோப்பா

சிரியாவில் இருந்து புலம்பெயர்பவர்களுக்கு ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை!

சிரிய அரசாங்கத்திற்காக அட்டூழியங்களில் ஈடுபடும் எவருக்கும் தனது நாட்டில் தஞ்சம் புகுவதற்கு எதிராக ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரித்துள்ளார்.

அவர்கள் “சட்டத்தின் முழு வலிமையையும்” எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார்.

ஜேர்மனி கடந்த தசாப்தத்தில் சிரிய அகதிகளுக்கான முக்கிய இடமாக உள்ளது. மேலும் பல இலட்சம் சிரிய பிரஜைகள் அங்கு வாழ்கின்றனர்.

முன்னாள் சிரிய இரகசிய பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே ஜேர்மனியில் பல துஷ்பிரயோகங்களை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளநிலையில் அமைச்சரின் எச்சரிக்க வந்துள்ளது.

சர்வதேச பாதுகாப்பு அதிகாரிகளும் உளவுத்துறை சேவைகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று பேர்பாக் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில் ஜேர்மனி “மிகவும் விழிப்புடன் உள்ளது” என்று உள்துறை அமைச்சர் நான்சி ஃபைசர் கூறினார்.

மேலும் ஒழுங்கற்ற இடம்பெயர்வுகளைக் குறைக்க முயற்சிப்பதால், நாடு ஏற்கனவே அதன் எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள எல்லைச் சோதனைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!