ஐரோப்பா செய்தி

ஜெர்மனி 3,500 ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தனியார் வங்கி!

ஜெர்மனியை பின்புலமாக கொண்ட டாய்ச் வங்கி, 3,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

பன்னாட்டு வர்த்தகம் தொடர்பான கடன்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் டாய்ச் வங்கி, கடந்தாண்டு தனது லாப விகிதத்தில் எதிர்பாரா இழப்பை சந்தித்தது. இதனால் செலவுகளை குறைக்கும் நடவடிக்கை என்ற பெயரில் ஊழியர் பணி நீக்கத்தை கையில் எடுத்துள்ளது.

டாய்ச் வங்கியின் தலைமை நிர்வாகி கிறிஸ்டியன் தைவிங், ’ஒரு நிச்சயமற்ற சூழலில் வங்கியின் செயல்திறன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பயணிப்பதை’ உறுதி செய்துள்ளார்.

மேலும் கடந்த 16 ஆண்டுகளில் மிக அதிகமான அளவில், வரிக்கு முந்தைய லாபமாக கிட்டத்தட்ட 5.7 பில்லியன் யூரோக்களை டாய்ச் வங்கி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தருவதற்கான புள்ளி விவரமாக இருப்பினும், கடந்தாண்டு லாபத்தில் டாய்ச் வங்கி அடிவாங்கிய முக்கியமாக பார்க்கப்படுகிறது.

லாபத்தில் சறுக்கியதை அடுத்து செலவுகளை கட்டுப்படுத்த வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டாய்ச் வங்கியின் லாபத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2.5 பில்லியன் யூரோ செயல்திறனுக்கு புதிய நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகள் அவசியம் என வங்கி கண்டடைந்துள்ளது. இதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நேரடி வாடிக்கையாளர் அல்லாத பிரிவுகளில் 3,500 பணியிடங்களை குறைக்கும் முடிவை டாய்ச் எடுத்துள்ளது. இதனால் அந்த பணியிடங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content