ஐரோப்பா

ஜார்ஜியா விமான விபத்து – கருப்புப் பெட்டி மீட்பு!

ஜார்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கிய இராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

புதிய தகவல்களின் படி 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யார் என்பது இனங்காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானமானது, ஜார்ஜியாவின் எல்லையைக் கடந்த சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புலனாய்வாளர்கள் விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ( Recep Tayyip Erdogan) தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விசாரணைக்காக 46 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!