இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பேரிடரை ஒப்பிடும் கம்மன்பில!

பேரிடர் தொடர்பில் அலட்சிய போக்குடன் செயல்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தற்போது தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும், தந்திரோபாயமான முறையிலேயே வழக்கு தொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கம்மன்பில மேலும் கூறியவை வருமாறு,

“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் கிடைத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே பாரிய அழிவு ஏற்பட்டது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரின்போதும் அலட்சிய போக்குடன் செயல்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை ஏற்பட்ட இழப்பைவிடவும் ஆயிரம் மடங்கு இழப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

பெலவத்தையில் (ஜே.வி.பி. தலைமையகம்) நிதி உள்ளது. இது இழப்பீடுக்கு வழங்கப்பட வேண்டும். அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும். அமைச்சர்களின் நிதியும் வழங்கப்பட வேண்டும். தமது தவறை அரசாங்கம் ஏற்கவேண்டும்.

அவ்வாறு இல்லையேல்தான் நாம் சட்ட நடவடிக்கையில் இறங்குவோம். எமது சட்டத்தரணிகள் இது பற்றி ஆராய்ந்துவருகின்றனர்.” – என்றார் உதய கம்மன்பில.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!