இலங்கை

இலங்கையில் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ், சுற்றிவளைப்புக்காக சென்ற  உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்த குமார சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவருடைய குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி 2.5 மில்லியன் ரூபாவை வழங்கியதுடன், பொது பாதுகாப்பு அமைச்சர்  திரான் அலஸ் அவர்களினால் உபுல் சமிந்தவின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தின் சார்பில்  உபுல் சமிந்தவின் சேவைக்காக 1.75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், அத்தொகை பதில் பொலிஸ் மா அதிபர்  தேஸ்பந்து தென்னகோனினால் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அண்மையில் அறிவித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் 47 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!