இந்தியா செய்தி

5லட்சம் செலவில் விஜய் மக்கள் இயக்கத்தினால் நடைபெற்ற விலையில்லா விருந்தகம் திட்டம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேல வாளாடி கிராமத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு காலை உணவான விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தில் இது வரை 25ஆயிரம் மக்கள் பயனடைந்து உள்ளனர் எனவும் இதற்காக ரூ5லட்சம் செலவு செய்துள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் உத்தரவுக்கு இணங்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி கிராமத்தில் கடந்த உலக பட்டி தினம் மே28 அன்று விலையில்லா விருந்தகம் என்ற காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.

பிப்ரவரி 6ம் தேதி இன்று வரை 250 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த மேலவாளாடி கிராமத்தில் தினசரி 80லிருந்து 120 ஏழை எளிய மக்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

தினசரி காலை பொங்கல்,வடை ஊத்தாப்பம், கேசரி, கிச்சடி, சட்னி, சாம்பார், இனிப்பு பணியாரம், கார பணியாரம் என வழங்கி வந்தனர்.

தினசரி இதற்கான செலவு ரூபாய் 1500முதல் ரூ.2000 வரை செலவாகிறது. இந்த 250நாட்களுக்கு இதுவரை ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் இந்த செலவுகளை மக்கள் இயக்கத்தினர் செலவு செய்துள்ளதாகவும் திருச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் விக்னேஷ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று உணவுகளை வழங்கினர்.

விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட அணி செயலாளர் மாசோ, மாவட்ட பொருளாளர் பாரதி, மாவட்ட துணைத் தலைவர் ஹரிஷ், மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் ஹரி, அரவிந்த், மற்றும் லால்குடி நகர தலைவர் கோபால், ஒன்றிய செயலாளர் பாலா, துணை செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சந்தோஷ் மற்றும் நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி