தெற்கு பிலிப்பைன்ஸில் நடந்த சாலை விபத்தில் நால்வர் உயிரிழப்பு, 13 பேர் காயமடைந்தனர்

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மிசாமிஸ் ஓரியண்டலில் வேனும் பிக்கப் டிரக் ஒன்றும் மோதிய சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வேன் லகுயின்டிங்கன் நகரில் உள்ள சாலை வளைவில் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அதன் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் சென்று லொரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 3 பேரும், லொரியில் பயணம் செய்த ஒருவரும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டது.
(Visited 21 times, 1 visits today)