முன்னாள் சபாநாயகர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி சப்புகஸ்கந்த தெனிமல்ல பகுதியில் இன்று (11) இரவு காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காரில் ஒரு பெண்ணும் சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பெண் கிரிபத்கொடை வைத்தியசாலையிலும், சிறு குழந்தை சிகிச்சைக்காக ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் விபத்தில் காயமடைந்த அசோக ரன்வலவும் சிகிச்சைக்காக கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது விபத்துக்குள்ளான வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





