உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது!
அரச புலனாய்வுப் பிரிவின் State Intelligence Services (SIS)
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே Suresh Saleh கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் CID குழுவொன்றினாலேயே பெலியகொட பகுதியில் வைத்து இன்று (25) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் சந்தேக நபராகக் கருதப்படுகின்றார்.
மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெறும் காலப்பகுதியில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதுரகத்தின் ஆலோசகராக பதவி வகித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலர் அக்காலப்பகுதியில் குற்றஞ்சாட்டி இருந்தனர்.





