இலங்கை

இலங்கையில் 100 முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் முக்கிய உத்தரவு

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை (பிஸ்டல்) உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு துப்பாக்கிகளை பெற்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளது.

ஏறக்குறைய 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு துப்பாக்கியைப் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் இல்லாதொழிக்கப்படும்.

இதனால் நாடாளுமன்ற கொடுப்பனவு, ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், எரிபொருள் வசதி மற்றும் முத்திரை கட்டண வசதி இழக்க நேரிடும்.

எவ்வாறாயினும், மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் இருந்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளை மட்டுமே பொது தேர்தல் நாள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் மீண்டும் தெரிவு செய்யப்படாத அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் முடிந்த அன்றே தமது அலுவலகங்களை ஒப்படைக்க வேண்டும்.

(Visited 26 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்