அருங்காட்சியகமாக மாற்றப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீடு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபபன் அரண்மனை, அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.
ஜூலை மாதம் மாணவர் எழுச்சிக்குப் பிறகு அவாமி லீக் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
85 வயதான நோபல் அமைதிப் பரிசு வென்றவரும் இடைக்காலக் காப்பாளர் அரசாங்கத்தின் தலைவருமான முகமது யூனுஸ், அருங்காட்சியகமாக மாற்றுவது “அவரது தவறான ஆட்சியின் நினைவுகளையும், மக்கள் அவரை அதிகாரத்திலிருந்து அகற்றியபோது கொண்டிருந்த கோபத்தையும் பாதுகாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உரிமை ஆர்வலரும் ஆவணப்பட புகைப்படக் கலைஞருமான 27 வயதான மோஸ்ஃபிகுர் ரஹ்மான் ஜோஹன், இந்த அரண்மனை “கடந்த கால அதிர்ச்சி, கடந்த கால துன்பம் மற்றும் எதிர்ப்பையும் காட்சிப்படுத்தி அடையாளப்படுத்தும்.” என தெரிவித்துள்ளார்.
2024 இயக்கத்தின் போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்கள் மீது அருங்காட்சியகம் கவனம் செலுத்தும் என்று செய்தி நிறுவன அறிக்கை மேலும் கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஜூலை முதல் ஆகஸ்ட் 2024 வரை சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.





