வட அமெரிக்கா

கனடாவில் வானத்திலிருந்து விழுந்த மீனால் பற்றி எரிந்த காடுகள் – வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் Ashcroft நகரில், வானத்திலிருந்து மீன் விழுந்ததில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒஸ்பிரே ரகப் பறவை ஒரு மீனைக் கவ்வியபடி பறந்து சென்ற போது அந்த மீனை அது தவறவிட்டு கீழே விழுந்ததில் அது நேராக மின்கம்பியின் மீது விழுந்துவிட்டது.

இதன் காரணமாக மின்கம்பியில் தீ பிடித்து, சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடையையும் ஏற்படுத்தியது.

தீயணைப்பு துறையினர் தீயின் காரணத்தை விசாரித்தபோது, இந்த அபூர்வமான காரணம் கண்டறியப்பட்டதில் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, Ashcroft தீயணைப்பு துறை தங்களது Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளது. “வானத்தில் இருந்து விழுந்த ஒரு மீன்… அது தீயின் காரணமாக மாறும் என்பதை யாரும் எதிர்பார்க்க முடியாது!” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த மீன் கவ்வப்பட்ட ஆறு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
Skip to content