ஆசியா

சிங்கப்பூரில் பாரிய அளவில் தொழில் பெற்ற வெளிநாட்டு ஊழியர்கள்!

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களின் அதிகமானோருக்கு வேலை கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் வேலையில் இருந்த ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 88,400 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, 2022 ஆம் ஆண்டை விட ஆட்குறைப்பு கடந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்து 14,590 ஆக இருந்தது.

வெளிநாட்டு ஊழியர்கள் முக்கியமாக கட்டுமானம், உற்பத்தி, நிதி துறை போன்ற வேலைகளில் அதிகம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான ஆறு காலாண்டுகள் சரிவுக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 79,800 ஆக சற்று அதிகரித்தது.

இந்த ஊழியர் சந்தை புள்ளி விவரங்களை இன்று மார்ச் 14 அன்று மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிடப்பட்டது.

வேலை இழந்த ஊழியர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் அவர்கள் வேலை செய்த நிறுவனங்களின் சீரமைப்பு பணிகளால் தங்கள் வேலைகளை இழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!