ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஆற்றுப் பாறைகளில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி; கால் துண்டித்து மீட்பு

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள ஃபிராங்கிளின் ஆற்றில் படகு வலித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணியின் கால், இரு பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.

60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நபரை மீட்க மீட்புப் பணியாளர்கள் கிட்டத்தட்ட 20 மணி நேரம் போராடினர்.

அந்த நபர் இரவு முழுவதும் ஆற்றில் இருந்தார்.அவருடன் மருத்துவக் குழுவும் இருந்தது.

அவரது காலைப் பாறைகளிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.கடைசியாக, வேறு வழியின்றி, சிறப்புச் சாதனத்தைப் பயன்படுத்தி அவரது காலை மருத்துவக் குழு துண்டித்தது.

அதை அடுத்து, அந்த நபர் ஹெலிகாப்டர் மூலம் ஹோபார்ட் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.அந்த நபரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.

நவம்பர் 22ஆம் திகதியன்று ஃபிராங்கிளின் ஆற்றில் சுற்றுப்பயணிகள் கும்பலாகப் படகு வலித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இச்சம்பவம் நிகழ்ந்தது.

(Visited 43 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!