ஐரோப்பா

ஸ்பெயினில் மீண்டும் அச்சுறுத்தும் வெள்ளம் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

தெற்கு ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் பகுதியில் கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மலாக்கா மற்றும் வடகிழக்கு கட்டலேனியா ஆகிய பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை பதிவாகக் கூடுமென அந்த நாட்டு வானிமை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் அங்குள்ள முக்கிய சுற்றுலா வலயங்களிலும் வெள்ளப் பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் கிழக்கு வலென்சியா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் குறித்த பகுதிக்கு மீண்டும் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் வடகிழக்கு ஸ்பெயினில் நேற்றைய தினம் 180 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

(Visited 36 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்