ஐரோப்பா செய்தி

லண்டன் நோக்கி பயணித்த விமானம்!! கதவை திறக்க முயன்ற இளைஞர்

விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட தயாரானது. பயணிகள் அனைவரும் புறப்பட தயாராகி வருகின்றனர். விமானம் விரைவில் புறப்படும் என ஊழியர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையில், பக்கத்து இருக்கையில் இருந்த பயணியிடம் வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விமானத்தின் கதவைத் திறப்பது போல் உரக்கக் கத்திக் கொண்டே கதவை நோக்கிச் சென்றார்.

இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இளைஞன் கதவை நோக்கி நடந்து கொண்டிருந்த போது மேலும் இருவர் தடுத்துள்ளனர்.

குரோஷியாவின் சதாரில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற Ryanair விமானத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் சதாரில் இருந்து லண்டனுக்கு ரியான் ஏர் விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.

விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவர் தனது இருக்கையிலிருந்து சத்தமாக கத்திக்கொண்டே எழுந்தார். விமானத்தின் கதவை எடுப்பது போல் அடி எடுத்து வைத்தார்.

அப்போது, ஒரு நபர் அவரை தடுத்து நிறுத்தினார். மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த இளைஞனை கீழே தள்ளினார்கள். விமான ஊழியர்கள் அவரை உள்ளூர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் விமானம் அதன் இலக்கை நோக்கி புறப்பட்டது. இந்த திடீர் சம்பவத்தால் அதில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் முழுவதையும் பயணிகள் கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளனர். தற்போது அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content