இந்தியா

இந்தியா : உத்தரபிரதேசத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து ஐவர் சடலமாக மீட்பு!

உத்தரபிரதேச மாநிலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்து கிடந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.

மூன்று குழந்தைகளின் உடல்கள் படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் லிசாடி கேட் காவல் நிலையப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீடு பூட்டியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதிக்கு சென்று ஆய்வுகளை முன்னெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மொயின், அவரது மனைவி அஸ்மா மற்றும் அவர்களது மூன்று மகள்களான அப்சா (8), அசிசா (4), மற்றும் அடிபா (1) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடு பூட்டப்பட்ட விதம், குற்றத்தில் ஈடுபட்ட நபர் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவராக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது,” என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணைகள், குற்றத்திற்குப் பின்னால் பழைய பகை இருக்கலாம் என்று கூறுகின்றன. “விரிவான விசாரணை நடந்து வருகிறது அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே