இலங்கை

தல்பேயில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் விசாரணை

ஹபராதுவ, தல்பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தங்களை பொலிஸார் என்று அடையாளப்படுத்தி கொண்ட குழுவொன்று குறித்த நபரை மாத்தறையில் இருந்து காலி – தல்பே வரை கடத்தி சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னர் குறித்த குழுவினர் அந்த நபர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 30 வயதான நபர் தற்போது கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!