ஆசியா

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 50 பேர் வெளியேற்றம்

சிங்கப்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென தீ மூண்டதைத் தொடர்ந்து 50 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள Tanjong Pagar Plaza புளோக் 4இல் கட்டடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீச்சம்பவம் குறித்து நேற்று மதியம் 2:15 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீயணைப்பாளர்கள் நீர் பாய்ச்சும் குழாய்கள் கொண்டு தீயை அணைத்தனர். 5ஆம் மாடியில் இருந்த வீட்டின் படுக்கையறையிலுள்ள பொருள்களில் தீப்பற்றியதாகக் கூறப்பட்டது.

பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. பக்கத்து புளோக்கில் வசிக்கும் பெண் ஒருவர் தீ மிகப்பெரிதாக இருந்தது என்றும் தீயணைப்பாளர்கள் விரைவாக வந்தனர் என்றும் கூறினார்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content